திருவல்லிக்கேணியம்மாள் வார்த்தைகள்

Text input by Subhadra Sanath

  1. அடுப்பிடுகல் என்றேனோ எம்பாரை போலே?
  2. அவரோ நீர்? எனக்கேட்டேனோ மணற்பாக்கத்தாரைப் போலே?
  3. ஆரோக்யம் வேண்டினேனோ பின்பழகியார் போலே?
  4. உசாத்துனையாய்ச் சென்றேனோ ஆழ்வானைப் போலே?
  5. உமிழ்ந்திகழ்ந்தேனோ கூரகுலோத்தமர்போலோ?
  6. உடன்சென்றுயிர் நீத்தேனோ உலகாரியனைப்போலே?
  7. மழையில் நின்றேனோ எம்பெருமானாரைப்போலே?
  8. மகனைக்கூவி மாதவனைக்கண்டேனோ அம்மையார் போலே?
  9. மனையாளை விட்டேனோ வில்லியாரைப்போலே?
  10. வெள்ளாட்டியானேனோ ஆண்டானைப்போலே?
  11. இருகரையரென்றேனோ வடுகரைப்போலே?
  12. இடைச்சிகளிடையே நின்றேனோ வங்கிப்புத்தாரைப் போலே?
  13. இடைகழியிலிருந்தேனோ திருக்கண்ணமங்கையாண்டான் போலே?
  14. ஈட்டைப்பெருக்கினேனோ பெரிய ஜீயரைப்போலே?
  15. ஈரவாடையால் கண்டேனோ ஈரங்கொல்லியைப் போலே?
  16. உம்மைப்போலேயென்றேனோ அநந்தாழ்வான் போலே?
  17. உலகாரியனோ என உரைத்தேனோ தோழப்பரைப் போலே?
  18. சென்றுவா என்றேனோ சுமித்திரையாரைப்போலே?
  19. செண்பகமிட்டேனோ ராஜகுமாரனைப்போலே?
  20. நாடுபுகுவீரென்றேனோ ஆண்டாளைப்போலே?
  21. வேண்டுவதிதேயென்றேனோ பட்டரைப்போலே?
  22. பங்குகொள்ளுமென்றேனோ பண்டாரத்தைப் போலே?
  23. மூர்ச்சித்து விழுந்தேனோ வண்டரைப் போலே?
  24. எழுப்பிவிட்டேனோ உறங்காவில்லிபோல?
  25. ஒருகோல்துறை பெற்றேனோ அம்மையாரைப்போலே?
  26. பின்னே குளித்தேனோ அப்பாவைப்போலே?
  27. புடவையால் துடைத்தேனோ ஆச்சியாரைப் போலே?
  28. அந்தரங்கங்கண்டேனோ கொற்றியைப் போலே?
  29. ஒளிந்து கொள்ளுமென்றேனோ அசடனைப்போலே?
  30. வாட்டியருள் பெற்றேனோ வண்ணாத்தான் போலே?
  31. முதல்வனைப் பெற்றேனோ கௌஸலையார் போலே?
  32. பொன்வட்டிலை யெறிந்தேனோ ஆழ்வானைப்போலே?
  33. கைதூக்கிக் காட்டினேனோ எம்பாரைப்போலே?
  34. பட்டோலை கொண்டேனோ பிள்ளையைப்போலே?
  35. வந்தேறி என்றேனோ அநந்தாழ்வான் போலே?
  36. துடையில் தாங்கினேனோ நஞ்சீயரைப்போலே?
  37. கோல் வேண்டாமென்றேனோ ஜீயரைப் போலே?
  38. பாதுகமாகப் பெற்றேனோ தாசரதியைப் போலே?
  39. பவித்திரமெனப்பெற்றேனோ ஆழ்வானைப்போலே?
  40. சேற்றில் படுத்தேனோ மணக்கால் நம்பியைப் போலே?
  41. காடுவெட்டிக் கண்டேனோ திருமலையாழ்வார் போலே?
  42. ப்ராவண்யமுடையேனோ நாயனாரைப்போலே?
  43. தகப்பனை கர்ஹித்தேனோ அநந்தரத்திலவன் போலே?
  44. சதகம்பாடி நோய் கெடுத்தேனோ கூரநாராயணர் போல?
  45. கைச்செம்பைப்பெற்றேனோ அண்ணாவைப்போலே?
  46. வாரி எடுத்தேனோ கிடாம்பியாச்சானைப்போலே?
  47. மூத்தபின் கற்றேனோ வாதிகேஸரியைப் போலே?
  48. முகம்மாறிக்காட்டினேனோ எம்பாரைப்போலே?
  49. குறட்டிலிருந்து காத்தேனோ ஆண்டானைப்போலே?
  50. குடிநீரருந்தக்கொடுத்தேனோ உடையவரைப்போலே?
  51. பணிகொள்ளப்பெற்றேனோ கிடாம்பியாச்சான் போலே?
  52. நிதிபெற்றுவந்தேனோ ஆழ்வானைப்போலே?
  53. பெற்றவரைப் பேணினேனோ தர்மவ்யாதனைப்போலே?
  54. பலவுருவங்கொண்டேனோ ஸௌபரியைப்போலே?
  55. நீர் தானம் செய்தேனோ ரந்தி தேவரைப் போலே?
  56. சாக்ஷியானேனோ மார்க்கண்டேயனைப்போலே?
  57. எல்லாமுமானேனோ கௌசலையார் போலே?
  58. யான்வேண்டேன் என்றேனோ ஆழ்வாரைப் போலே?
  59. பரதனுக்குச் சொன்னேனோ குகப்பெருமாள் போலே?
  60. பேராயிரம் சொன்னேனோ பீஷ்மரைப்போலே?
  61. பிண்ணாக்கையிட்டேனோ பெருமாளைப்போலே?
  62. தண்ணீர் கொடேனென்றேனோ திருமலைநம்பியைப் போல?
  63. ஆடக்கண்டேனோ சோமாசியாண்டானைப்போலே?
  64. ரக்ஷையிட்டேனோ எம்பாரைப் போலே?
  65. திருநாமமிட்டேனோ வண்ணாத்தான் போலே?
  66. கண்டு மோஹித்தேனோ திருப்பாவை ஜீயரைப்போலே?
  67. மோதிரமீந்தேனோ பட்டரைப்போலே?
  68. திருமேனி காத்தேனோ கொடவரைப்போலே?
  69. சரிவிலிழிந்தேனே தோழப்பரைப்போலே?
  70. பாதுகைபேணிப் பொருள் கண்டேனோ எம்பாரைப்போலே?
  71. பேயை ஒட்டினேனோ இளையாழ்வாரைப் போலே?
  72. வார்த்தையொன்று சொன்னேனோ த்ரிபுராதேவியார் போலே?
  73. தாய்விழியாககாதென்றேனோ பட்டரைப்போலே?
  74. தவறாதாரேதென்றேனோ பிராட்டியாரைப் போலே?
  75. நாவகாரியமாக்கினேனோ வடுகரைப்போலே?
  76. காலலம்பிவந்தேனோ ஆண்டானைப்போலே?
  77. தினைமாவைக்கொடுத்தேனோ வேடரைப்போலே?
  78. அவனுக்காக அழுதேனோ ஆண்டாளைப்போலே?
  79. தெருமண்ணையேற்றேனோ ஜீயரைப்போலே?
  80. கடப்பாரையாலடித்தேனோ அந்தாழ்வானைப் போலே?
  81. அடியில்கேட்டே அறிய வேண்டுமென்றேனோ பெற்றியைப்போல?
  82. துரும்புகண்டு மோஹித்தேனோ ஆயியைப்போலே?
  83. குடப்பாம்பில் கைவிட்டேனோ கோழியர்கோன்போலே?
  84. கிழியறுத்து வந்தேனோ பட்டர்பிரான் போலே?
  85. இருடமலீந்தேனோ கலியனைப்போலே?
  86. கனவில் மணந்தேனோ நாச்சியாரைப்போலே?
  87. சிறுவிரலைத்தந்தேனோ மங்கையர்கோன்போலே?
  88. பெருந்தமிழனானேனோ முதலாழ்வார் போலே?
  89. காவல் பூண்டேனோ கன்னியைப்போலே?
  90. பொன்னடி வாழ்த்தினேனோ இனக்குறவர் போலே?
  91. அநுகாரம் செய்தேனோ ஆழ்வாரைப் போலே?
  92. மதியை மணிவிளக்காவைப்பன் என்றேனோ யானையைப் போலே?
  93. என்னினைந்திருந்தீர் என்று கேட்டேனோ தாயைப் போலே?
  94. கொடுபோகப் போனேனோ சத்ருக்னன் போலே?
  95. உபதேசம் செய்தேனோ அவன்மகன்போலே?
  96. உயிர்காத்தாட்செய்தேனோ திருவடியைப் போலே?
  97. உயிர்காத்திருந்தேனோ பிராட்டியைப்போலே?
  98. என் மனம் செல்லாதென்றேனோ திருவடியைப் போலே?
  99. மற்றொன்றுங்காணேனோ பாணரைப்போலே?
  100. சொல்லென்னச் சொன்னேனோ கட்டுவிச்சிபோலே?
  101. விலவறச்சிரித்தேனோ அடிப்பொடியார் போலே?
  102. பொருள் கற்க அழைத்தேனோ நாலுகவியார் போலே?
  103. அந்தாதி பாடவவல்லேனோ அழகியமணவாளரைப்போலே?
  104. உமது சந்ததிக்கென்றேனோ மாமுனிகளைப்போலே?
  105. ஆலாங்கட்டி என்றேனோ நாயனைப்போலே?
  106. ஆடியூன்றப் பெற்றேனோ தேவராஜரைப்போலே?
  107. நாலாயிரம் பெற்றேனோ நாதமுனிகளைப்போலே?
  108. பாட்டனாரைப் பாருமென்றேனோ ஆளவந்தாரைப் போலே?

Leave a Reply